கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்!

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனைவரும்  கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியொன்றைப் பெற்றுக்கொள்வதும், உள்ளக மோதல்கள் இன்றி குழுவாக செயற்படுதல் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *