
புத்தளம் பிரதேசத்தின் புகழ்பூத்த கல்விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்கியவாதி மட்டுமல்ல. எழுத்தாளர், பேச்சாளர், ஓவியர் என பல கலைகளுக்கு சொந்தக்காரர். அவர் புத்தாக்க சிந்தனையாளரும் சிறந்த விமர்சகரும் பாடகரும் கூட. இலக்கியவாதி ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்பதும் மிகையல்ல.