பளை- அரசாங்கேணி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் படுகாயம்!

பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசாங்கேணி பகுதியில் இன்று வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில்  இளைஞன்  படுகாயம் அடைந்த்துள்ளார். 

குறித்த பகுதியில் தமக்குச் சொந்தமான வயல் காணியில் துப்புரவு பணியில்   ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மண்ணுள் புதையுண்டு இருந்த நிலையில் இருந்த வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் அரசங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞன்  படுகாயம் அடைந்த்துள்ளார். 

தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக பளை போலீசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply