ஐ.நா உதவிச் செயலாளர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு..!

இலங்கையில் கல்வி சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம் பொதுத்துறையை நவீன மயமாக்குவதில் ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்துகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் திருமதி கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (14) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

 ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா, பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

 இலங்கையின் நிலையான அபிவிருத்திக்காக இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுத்துறையை நவீனமயப்படுத்துதல் ஆகியவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளரும் UNDP வதிவிடப் பிரதிநிதியுமான Azusa Kubota, UNDP டிஜிட்டல் மற்றும் புத்தாக்க குழுவின் தலைவர் Fadil Bakir மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *