பேராதனை பேருந்து நிலையத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பேருந்து  தரிப்பிடத்தில்  அசைவின்றி சரிந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அவரை பேராதனை வைத்தியசாலையில்  பொலிஸார் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சுமார் 70 வயது, சுமார் 5 அடி 5 அங்குல உயரம் மற்றும் சுமார் 2 அங்குல முடி கொண்டவர்.

முகத்தில்  வெள்ளைத் தாடியும், மேல் உடல் நிர்வாணமும், வெள்ளை ஆடையும் அணிந்திருப்பதாகவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *