தமிழ்தேசிய இருப்பை உறுதிப்படுத்துங்கள்: திருமலை தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம் கோரிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுச்சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய இருப்பிற்காக ஒரு பாராளுமன்றத் பிரதிநிதித்துவத்தை திருகோணமலையில் (Trincomalee) உறுதிசெய்ய ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை திருகோணமலை மாவட்டம் தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம் கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் 2024.11.14ம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்ட நிலையிலும், பல்வேறு தமிழ் கட்சிகள் போட்டியிடும் சூழலிலும் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்கவைப்பது என்பது தொடர்பாக திருகோணமலை மாவட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் (TSA) அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பின்வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செப்டெம்பர் 29 – மிகக்குறுகிய கால முன்அறிவித்தலுடன் திருகோணமலையில் உள்ள 27 சிவில் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *