வட்டுக்கோட்டையில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் (வயது 47) ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக குறித்த நபர் கசிப்பினை விற்பனை செய்து வருவதாக இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஏழு லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கசப்புடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிசார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *