நெருக்கடியை நோக்கி நகரும் அரசாங்கம்- ராஜித எச்சரிக்கை..!

அரசாங்கம் தற்போது  நெருக்கடியை நோக்கி நகர்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை எதனையும் மாற்றாமல் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அலை அலையாக வந்த மக்கள் ஏமாற்றமடைவார்கள் எனவும், எதிர்வரும் சிங்கள தமிழ்  புத்தாண்டுக்குள் அவர்களின் நடத்தை எவ்வாறு அமையும் என்பதை பார்க்கலாம் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *