மதத் தலைவர்களைச் சந்தித்த தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் வேட்பாளர்கள்! முழு வீச்சில் பிரச்சார பணிகள்

தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியானது தனித்து யாழில் போட்டியிடுகிறது.

இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களைச் சந்தித்தனர்.

இதன் போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடிதுடன் மத்த தலைவர்களிடம் ஆசீர்வாத்த்தையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரச்சார பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்க உள்ளதாக சட்டதரணி மணிவண்ணண் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *