தவுசமடு வயல் பகுயியில் உயிரிழந்துள்ள நிலையில் யானைக் குட்டியொன்று மீட்பு!

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுயியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுயியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

குறித்த யானைக்குட்டி இன்று காலை முதல் சுகையீனமுற்ற நிலையில் உயிருடன் வீழ்ந்து கிடந்ததாகவும் பின்னர் பகல் ஒரு மணியளவில் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாக இருப்பதாக இதன்போது தெரிவித்தனர். 

நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *