யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் கந்தபுராணம் பெருவிழா- மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய  கந்த புராண பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று காலை 8:30 மணியளவில்  தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. 

வடமராட்சி பிரதேச கந்தபுராண பெருவிழா தலைவர் திரு ஐங்கரன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கந்தபுராண உரைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வாழ்நாள் பேராசிரியர்களான   மனோன்மணி சண்முகதாஸ், ஆகியோர் நிகழ்த்தினர்.

குறித்த நிகழ்வின் முதல்நாள் நிகழ்வுகள்  கடந்த 16/10/2024 அன்று மேலைப்புலோலி மாயக்கை சித்தி விநாயகர் ஆலயத்திலும், இரண்டாம் நாள நிகழ்வுகள் அல்லையம்பதி துன்னாலை வடிவேலர் மண்டபத்திலும்,  இடம் பெற்றிருந்த நிலையில் இறுதி நாளான இன்று சந்நிதியான் ஆச்சிரமத்யில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கந்த புராண ஓதுதல், பிரசங்கம் உட்பட முருக வழிபாட்டின் பெருமையை முன் கொண்டுசென்ற பலருக்கும் கந்தபுராணம் கலசம் எனும்  விருதுகள்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *