விஜித ஹேரத் வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானவை- காஞ்சன விஜேசேகர கருத்து..!

அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட பல கருத்துக்கள் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விஜித ஹேரத் எதிர்க்கட்சியில் இருந்த போதும், அரசாங்கத்தில் இருந்த போதும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் அங்கு தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எண்ணெய் விலையில் இருந்து பணம் பாக்கெட்டுக்கு செல்லும் என கூறியிருந்த நிலையில் தற்போது அந்த பணம் தற்போது பொறுப்பான அமைச்சர் அநுரகுமாரவின் பாக்கெட்டுக்கு செல்கிறது என கூற வேண்டும். 

மக்களுக்கு உண்மையை புரியவைத்தமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியால் விமர்சிக்கப்பட்டது உண்மையா பொய்யா என்பதை மக்கள் பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *