
புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள ஒரு பெண். நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான சாராவுக்கு என்ன நடந்தது என்பது விடை வெளிப்படுத்தப்படாத கேள்வியாக தொடர்கிறது.