
கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்போடியா தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 20 இளைஞர் யுவதிகளுடனான ஐந்து நாள் வதிவிட பயிற்சியொன்றுக்கு தாய்லாந்து சென்றிருந்தேன். அங்கே நாம் அனைவரும் தத்தமது நாடுகளில் குடிமக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில் காணப்படுகின்ற அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகள் குறித்து ஆழமாக உரையாடினோம்.