
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசாரப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று சரியாக இரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவிருப்பதால் ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளே பாராளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கப் போகிறது என்பது வெள்ளிடை மலை.