கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்..!

கிளிநொச்சி நகரை மையமாக கொண்டுள்ள கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி மாசு படிந்த நிலையில் காணப்படுபவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள் டெங்கு பரவக்கூடிய பொருட்கள் காணப்பட்டு வருகின்றமையால் டெங்கு பரவும் சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடம் தொடர்பாக மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில்  வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுவதை தொடர்பான செய்தி அறிக்கையிடல்கள் மூலம் பலமுறை தெரியப்படுத்திய போதும் அதிகாரிகள் மிகவும் அசம்மந்தப் போக்கை காணப்படுகின்றனர். 

தொடர்ந்தும் பேருந்து நிலையம் இவ்வாறு காணப்பட்டு வருகின்றது. 

கிளிநொச்சி பேருந்து நிலையமானது வட மாகாணத்தின் மத்தியில் காணப்படுவதோடு தென்பகுதியில் இருந்து வருகின்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்  பேருந்து நிலையமே மத்தியில் காணப்படுவதனால்  பேருந்து நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் காணப்படுவதனால் இவ்வாறான அசுத்தமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *