பிணை வழங்கவில்லை என்பதால் நிதீமன்றுக்குள்ளேயே தனது கழுத்தையும், கையையும் அறுத்து காயப்பட்டுத்திய சந்தேகநபர்!

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தனக்கு நீதிமன்றத்தால்  பிணை வழங்கவில்லை என்பதால் தனது கழுத்திலும் கையிலும் சிறிய கூரிய ஆயுதத்தால் அறுத்த சம்பவம் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் இடம் பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த மாதமளவில் வடமராட்சி கிழக்கு  பகுதியில் பாண் வியாபராத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து பாணை கடனுக்கு கோரியபோது குறித்த பாண் வி்யாபாரி கடன் கொடுக்க மறுத்த நிலையில் அவரிற்க்கு வாளால் வெட்டிய சம்பவம், மற்றும் கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்த போது அந் நபரிற்கும் வாளால் வெட்டினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு சில மாதங்களாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையிலும் சந்தேக நபருக்கு பிணை வழங்காமையால் சிறையிலிருந்து கொண்டுவந்த சிறிய கூரிய ஆயதம் ஒன்றினால் தனது கழுத்து, மற்றும் கைப் பகுதியில் வெட்டி காயம் விளைவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *