கடும் மழையுடன் வீசிய காற்று – கடையின் மீது விழுந்த மரம் -ஒரு பகுதி பலத்த சேதம்!

வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்று பெய்த கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக வீதியோரமாக நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்துள்ளது.


கடையின் மீது விழுந்ததில் கடை  சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கடையின் மீது விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *