காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகம்..!

காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில்  காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில்  அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மடக்கும்புர தோட்ட பொது முகாமையாளர் கௌஷல் மாதவன் ஏற்பாட்டில் குறித்த பகுதியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி கீத்குமார தலைமையின் கீழ் இடம்பெற்ற  நிகழ்வின் போது மண் பரிசோதனை செய்யக்கூடிய கருவி,மற்றும் தேயிலை கொழுந்தின் தரத்தினை தானாக ஆய்வு செய்து தரவுகளை வழங்கக்கூடிய தன்னியக்க கருவியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எல்பிட்டிய பிளான்டேஷனுக்கு உட்பட்ட முகாமையாளர்கள்,தோட்ட  அதிகாரிகள்,தொழிநுட்பவியலாளர்கள்,தொழிற்சாலை அதிகாரிகள்  என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *