நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம்..!

நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்த 1,126 இஸ்ரேலிய பிரஜைகள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்பதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வேறு எந்த வெளிநாட்டினருக்கோ அல்லது இந்த நாட்டின் பிரஜைகளுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *