பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் இன்று திடீர் சுற்றி வளைப்பு!

மஸ்கெலியா சுகாதார அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தலைமையில் நோர்வூட் நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் காய்கறி விற்பனை நிலையங்கள் சோதனை செய்யபட்டது.

இன்று திங்கட்கிழமை காலை  இந்த சம்பவம் இடம்பெற்றது.

அப்போது பாவனைக்கு உதவாத உணவு மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் வைத்து இருந்த வர்த்தக நிலையங்கள் 12 க்கு வழக்கு தாக்கல் செய்ய பட்டு உள்ளது என தலைமை பொது சுகாதார அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

இன்றைய தினம் நோர்வூட் நகரில் உள்ள 25 வர்த்தக நிலையங்கள் சோதனை செய்ய பட்டது அதற்கு நல்லதண்ணி, மஸ்கெலியா, நோர்வூட் நகரங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரிகள் பங்கு கொண்டு இந்த சுற்றிவலைப்பை மேற் கொண்டு பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் வைத்து இருந்த வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *