தம்பலகாமத்தில் ஆசிரியர் தின நிகழ்வு !

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் ( 26) ஆம் திகதி, கடந்த சனிக்கிழமை , காலை 10.30 மணியளவில் தம்பலகாமம், குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை தம்பலகாமம் முன்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, பாலர் பாடசாலை கல்விப்பணியக செயலாற்றுப்பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர், தம்பலகமம் கோட்டக்கல்விப்பணிப்பாளர், முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர், திருமதி. தில்லைநாதன் ஆசிரியை, குளக்கோட்டன் வித்தியாலய அதிபர், போதகர் ராஜா, தம்பலகமம் பொலிஸ் அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்விற்கு 25 முன்பள்ளி ஆசிரியைகள் வருகை தந்திருந்தனர்.பாடசாலை மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது மேடையேற்றப்பட்டன.








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *