வாகன இறக்குமதிக்கு பச்சைக்கொடி – அநுர அரசு எடுத்த முடிவு

  

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட முறைப்படி வாகன இறக்குமதி செயல்முறையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளது.

எனவே, எதிர்காலத்தில் அதற்கான முறையான நடைமுறையை தயாரித்து, பொது மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *