ராஜகிரிய பகுதியிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீப்பரவல்!

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள வாகன பழுது பார்ப்பு நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

புகை, தற்போதைய அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகள் கருத்திற் கொண்டு, அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *