வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அருமைலிங்கம் கணேசலிங்கம் என்னும் குடும்பஸ்தரின் BCN-8166 என்னும் இலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிளே  இரவு களவாடப்பட்டுள்ளது

சம்பவ தினத்தில் மழை பெய்ததால் வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவேளையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

குடும்பஸ்தரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமையை சம்பவ இடத்திற்கு வருகை தந்து அருகில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து மருதங்கேணி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *