தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதத்தை விதைக்கிறார்கள்; அநுர அரசில் தண்டனை நிச்சயம்! சப்றான் சூளுரை

தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதங்களை விதைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மூதூரில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதங்களை விதைக்கிறார்கள். 

திருடர்கள் இன்று ஊழல் செய்த வாகனங்களை வீதியில் நிறுத்திச் செல்கிறார்கள்.

இம்முறை திருகோணமலையில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி பெறும். இம்முறை மக்கள் இனங்களாக பிரிந்து வாக்களிக்காமல் இலங்கையர் என்ற நோக்கோடு வாக்களிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி அவர்களை இன்று தோழர் என்று அழைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். 

இதனால்தான் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கவுள்ளமைக்கு காரணமென தெரிவித்தார்.

Leave a Reply