மாமியார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மருமகன் தலைமறைவு! வவுனியாவில் பரபரப்புச் சம்பவம்

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன், நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *