கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்!

அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது.

உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில்  பீனட் என்ற அணிலை கருணை கொலை செய்ய விவகாரம்  பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

நியூயோர்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் பீனட்  என்ற 7 வயதான அணிலை வளர்த்து வந்துள்ளார். அவர்  குறித்த அணில் செய்யும் சேட்டைகள் மற்றும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக  பதிவேற்றி வந்துள்ளார்.

இதனால்  பீனட்  அணிலை  இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அனுமதியின்றி அணிலை வளர்த்ததாக அதனை பறிமுதல் செய்த சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு ரேபிஸ் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அணிலை  அதிகாரிகள் கருணை கொலை செய்ததால், பல லட்சம் பேர் கொதித்தெழுந்துள்ளனர். எலான் மஸ்க் போன்றவர்களும்  இதனை ட்ரம்புக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் அணிலுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்தையே கேட்கமுடிகிறது. அணிலை காட்டுக்குள் விடாமல் கொலை செய்வதா என்று கேட்டு தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெறுகின்றன.

செல்ல பிராணிகளை காக்க ட்ரம்ப்பால் தான் முடியும் என்று அமெரிக்க வலதுசாரிகள் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளதால், கமலா ஹாரிஸுக்கு குறித்த அணில் விவகாரம்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *