நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு- தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அறிவிப்பு..!

நாட்டில் தேங்காயின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக பொடி செய்யப்பட்ட தேங்காய் பால் அல்லது பொதி செய்யப்பட்ட திரவ தேங்காய் பால் பயன்படுத்த முடியும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் நுகர்வில் 60% க்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே நுகரப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த நிலைமையின் அடிப்படையில், பொடி செய்யப்பட்ட தேங்காய் பால் அல்லது பொதி செய்யப்பட்ட திரவ தேங்காய் பால் பாவனையை அறிமுகப்படுத்துவதன் மூலம், தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *