நாடாளுமன்றத் தேர்தல்- முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642 ஆக உயர்வு..!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 107 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, இதுவரை 1365 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 277 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *