
கர்ப்பிணித் தாய்மாருக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக டாக்டர் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.