இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 21 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, இக்காலப்பகுதியில் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *