மழை அனர்த்தம் காரணமாக யாழில் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *