
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியோடு தற்போது நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தி தொடர்பான ஒரு ஈர்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனால் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகளை மறந்து பொதுமக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

