
நாட்டின் பெரும்போக்கு அரசியலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரம்மாண்டமான எழுச்சி, சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளை பலவீனப்படுத்தி, எவ்வாறு ஒரு தடுமாற்ற நிலைக்குள் தள்ளியிருக்கின்றதோ அதற்குச் சற்றும் குறையாத விதத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அது ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

