கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 20ம் திகதிவரை விளக்கமறியல்!

எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும்  எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை  நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இன்று அதிகாலை பருத்தித்துறை  கடற்பரப்பில்  வைத்து கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடத்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக சற்று முன்னர் பருத்தித்துறை  நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட்ட நிலையிலேயே  அவர்களை  எதிர்வரும் இருபதாம்  திகதி  வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *