காதல் முறிவால் விபரீத முடிவு – உயிரை மாய்த்த இளம் ஆசிரியை

மொனராகலையில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று காலை (12) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மொனராகலை – நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நக்கலவத்தை பாரதி முன்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

காதல் முறிவு காரணமாகவே  இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply