மெண்டிஸ் கம்பனிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள மதுவரித்திணைக்களம்

 

டபிள்யூ.எம் மெண்டிஸ் அன்ட் கம்பனிக்கு, மதுவரித் திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, 2024 நவம்பர் 30ஆம் திகதிக்குள் வற் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று மதுவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நிறுவனம் செலுத்த வேண்டிய மதிப்பு கூட்டப்பட்ட வரி 3.5 பில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரி செலுத்தாமை தொடர்பில், அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம், டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *