யாழில் வாக்குச் சாவடி களுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பம்!

யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும், யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.     

வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று புதன்கிழமை (13)  காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. 

இதன்போது, யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *