12 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம்- வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  12 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி,  மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் கடுமையான இடி மின்னலுடன்  கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *