பொதுத் தேர்தல் 2024 இற்கான வாக்களிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் நிறைவு : 58.21. சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு கிளிநொச்சி மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 58.21 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தபால் மூல வாக்குகள் 3874. இதில் மொத்தமாக 62.05 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், இதுவரை பேர் வாக்களித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  வன்முறைச் சம்பவங்கள் இன்றி, அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மேலும் இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,863 அரச உத்தியோகத்தர்கள், 396 பொலிசார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பித்திருந்த வாக்களிப்பு நடவடிக்கையானது சற்று முன்னதாக பி.பகல் 4.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதுஅத்துடன்வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குகளை எண்ணுவதற்காக. கிளிநொச்சி மாவட்டத்தின் பழைய மாவட்ட செயலகவலாவாக்குப்பொட்டிகள் எடுத்துவரப்பட்டு வருவதாகவும்தெரிவித்தார் ஆறு முப்பது மணி அளவில் வாக்கு என்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *