படுதோல்வியடைந்த சுமந்திரன் – தேசிய பட்டியல் தொடர்பில் வெளியிட்ட அதிரடி கருத்து

 

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய செவ்வி மூலம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது யாழ் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். 

இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக  சிறீதரன், ரவிகரன், இரா.சாணக்கியன், சிறீநேசன், சிறீநாத், கோடிஸ்வரன், குகதாசன் ஆகியோர் தெரரிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *