கடமைக்கு சமுகமளிக்காத சாரதிகள் – பல ரயில் சேவைகள் இன்றும் இரத்து

ரயில் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்றும் பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை  சுமார் 15 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு மற்றும்,

கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் தற்போதைக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்  புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *