அநுர அரசின் புதிய பிரதமர் யார்? விஜித ஹேரத்துக்கு பலம் வாய்ந்த பதவி! நாளை பதவிப்பிரமாணம்

 

அநுர  தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் திய அரசாங்கத்தில் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய  பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வு நாளை(18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் தற்போது பிரதமராக இருக்கும் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

மேலும் விஜித ஹேரத்துக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கப் போவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை இருபத்தைந்து பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *