அரிசிக்கு தட்டுப்பாடு; அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை..!

நாட்டில் தற்போது நிலவும் அரிசி பிரச்சினையை தீர்க்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த மற்றும் சில்லறை விற்பனை சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, ஒருசில அரிசி வியாபாரிகளை பாதுகாக்காமல், மக்களைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

இதேவேளை இன்று சந்தையில் வெள்ளை அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில பல்பொருள் அங்காடிகள் வெள்ளை அரிசி விற்பனையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி நாளொன்றுக்கு 03 கிலோவுக்கு மேல் அரிசி கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *