தகாத உறவால் விபரீதம்- மனைவிக்கு ஏற்பட்ட நிலை..!

வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து மனைவி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மனைவியே காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காயமடைந்தவரின் கணவர், தகாத உறவில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவருடன் மூன்று மாத காலமாக இந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இந்த கணவர் தனது மனைவியை பலாத்காரமாக இந்த வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு தங்க வைத்துள்ளார்.

இதனால், மனைவி வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே தப்பிச் செல்ல முயன்ற போது மேல் மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மனைவி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவரும் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *