அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

வெளிநாட்டிலிருந்து 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *