எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி தீவிர முயற்சி – பேச்சுவார்த்தையில் மஹிந்த!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்,

அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான  பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து, மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *