லொஹான் ரத்வத்தேவின் மனைவி மீண்டும் விளக்கமறியலில்!

 

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தே எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மிரிஹான, எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த சொகுசு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​ரத்வத்த மற்றும் அவரது மனைவி இருவரும், குறித்த வீட்டில் தனது மாமியார் வசிப்பதாக பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *