தேசிய ரீதியில் பரீட்சைகளில் : சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்வி அமைச்சினால் கடந்த ஆண்டு இடம்பெற்ற தேசிய பரிட்சைகளில்,

சிறந்த பெறுபேறுகளைப்  பெற்று மாகாண ரீதியில் முதலிடத்தை பெற்ற,

மட்டக்களப்பு வலையக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில்,

தேசிய ரீதியில் சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு,

நேற்று (22)  மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில்,

 மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திர குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர கலந்து கொண்டதுடன்,

சிறப்பு விருந்தினர்களாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் திசா நாயக்க,

மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், 

நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது. 

தேசிய ரீதியில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்  இங்கு பிரதம அதிதியாள் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply